சம வேலைக்கு சம ஊதியம் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் 26.07.2025 அன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு !!

சம வேலைக்கு சம ஊதியம் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் 26.07.2025 அன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு !!

திமுக அரசின் 2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கை எண் 311-ஐ நிறைவேற்றி பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு “சம வேலைக்கு சம ஊதியம்” வழங்கக் கோரி மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்த இடைநிலை ஆசிரியர்கள் பதிவு மூப்பு இயக்கம் (SSTA) முடிவு எடுத்துள்ளது. 

ஜூலை 19ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூலை 26 ஆம் தேதிக்கு இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சம வேலைக்கு சம ஊதியம் கோரிய இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் ஒரே நாளில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment